திருக் காளத்தி காளத்தீசுவரர் திருக்கோயில்
(4)) ⚜ *திருக் காளத்தி காளத்தீசுவரர் திருக்கோயில்* . காளத்தி நாதரைத் துதிக்கும் *இன்னிசைத் திருமுறைகளை மனம் விருப்பிப் பாடுபவர்கள்* பாவம் நீங்கி துயரம் தீர்ந்து எளிதாய் தேவராவர், பிறவிப் பிணியும் போய் முக்தி பெறுவர் என்று தெய்வ மழலை தெரிவிக்கிறார்.
ராகு கேது மட்டுமன்றி கிரக தேவர்கள் ஒன்பது பேரும் ஒன்றாக வந்து வழிபட்டதால் காளத்தி நாதரை வழிபடுவோருக்கு எல்லா கிரக தோஷங்களும் நீங்குகின்றன. அப்படி இருக்கப் பொய்ப் பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் *திருக் காளத்தியில் ராகு கேதுவிற்குச் சிறப்பு வழிபாடு செய்து ராகு கேது தோஷத்தை மேலும் பெருக்கிக் கொள்வது அல்லாமல் சிவ அபச்சாரத்தையும் பாவத்தையும் சுமந்து செல்கின்றனர்* .
💥 *திருக் காளத்தியுள் அமைவே *உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே* (சுந்தரர்)
🔥 *சிறு தெய்வம் சேர்வோம்அல்லோம்* சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம் (அப்பர்)
☸ *நல்லார் நாமம் நமச்சிவாயவே* (சம்பந்தர்)
🌷 *எச்சத்தார் சிறுதெய்வம் ஏத்தாதே* அச்சோ ! என் சித்தத்தாறு *உய்ந்தவாறு அன்றே *உன் திறம் நினைந்தே* ,
🌑 *அவமாய தேவர் அவ கதியில் அழுந்தாமே* (திருவாசகம்)
என *சிறு தெய்வ வழிபாடு கூடாது, தீயவர்களின் தெய்வமான சிறு தெய்வத்தை வழிபடுவது தீமையே* தவிர உய்யும் வழி உண்டாகாது என்று எல்லாம் வல்ல முழுமுதல் கடவுளைக் கண்டு வாழ்ந்த அருளாளர்கள் அருளிய உண்மையை உணராமல், யாராலும் கொடுக்க முடியாத நலமெல்லாம் கொடுக்கும் சிறப்பு மிக்க சிவாலயங்களுக்குச் சென்றும் சிவ மகிமை தெரியாமல் சிவ நினைவு இல்லாமல் அம்பாள் பெருமாள் கணபதி முருகன் என்று ஆண் பெண் தெய்வ வழிபாட்டிலும் சிறு தெய்வ வழிபாட்டிலும் துர்கை காளி மாரி என்று தீய சக்தி வழிபாட்டிலும் முழுகுவதால் குளிக்கப் போய் சேற்றில் முழுகி எழுந்து வருகின்றனர்.
🌻 *எண்ணிலி பாவிகள் எம் இறை ஈசனை நண்ணறியாமல் நழுவுகின்றாரே* (திருமந்திரம்) என புண்ணியத்திலிருந்து விலகிப் பாவிகள் ஆகின்றனர். சிவ விரோதக் கோயில் நிர்வாகம் சிறு தெய்வ வழிபாடு செய்யும் அபச்சாரம் மட்டும் அல்லாமல் **பெண் வாடை வீசாத நெருப்பு ஆண்டவர் லிங்கோற்பவர் திருநாளான மகா சிவராத்திரித்* திரு விழாவில் *உருவம் இல்லாத காற்றாக இருக்கும் கடவுளுக்குக் கல்யாணம் செய்து வைத்துக்* கல்யாண உற்சவம் நடத்தி மற்றொரு மகா பாவம் புரிகிறது. ✡️ *நித்த மணவாளன் என நிற்கின்றான்* (அப்பர்) 🌺 *நித்த மணாளர் நிரம்ப அழகியர்* (திருவாசகம்) என *நித்திய கல்யாண சுந்தரராய் உள்ள பரம சிவம் அம்பாளின் பூஜைக்கு அருள் புரிந்து கல்யாண சுந்தரராய் வெளிப்பட்டு* அம்மனை மீண்டும் *தெய்வம் ஆக்கிய தலங்களில் மட்டுமே கல்யாண உற்சவம்* நடத்தலாம் . மற்ற தலங்களில் கல்யாண உற்சவம் நடத்துவது அங்கம் இல்லாத லிங்கப் பரம்பொருளை எல்லாம் கடந்த *கடவுளை காம தகனரை தாயுமான ஈசனை இழிவுபடுத்தும் சிவ துரோகம்*. மனித ஜென்மங்கள் தாங்கள் திருமணம் செய்து கொண்டு ஒழுக்கமுடன் வாழ மாட்டார்கள். கண்டபடி அலைவார்கள். பன்றிக்கு உபநயனத் திருவிழா (பூணூல் அணிவித்தல்) நடத்திப் பூணூலை இழிவுபடுத்தும் இந்து விரோத தமிழர்துரோக திராவிடக் கயவர்கள் போல *காற்றுக்கும் நெருப்புக்கும் நீருக்கும் வானத்திற்கும் மண்ணிற்கும் அங்கம் இல்லாத ஓங்கார வடிவ லிங்கப் பரம்பொருளுக்கும் அப்பனாய் அம்மனாய் குழந்தையாய் உள்ள மூவுருவ சோமாஸ்கந்தருக்கும் தாயான மாதேஸ்வரனுக்கும் ஆண் பாதி பெண் பாதியாகும் இருபாலீசருக்கும் காம தகனருக்கும் திருமண விழா நடத்திக்* கடவுளை இழிவுபடுத்துகின்றவர்கள் கடைந்தெடுத்த *சாக்கடை நாஸ்திகர்களே*.
0 Comments